மாந்த்ரீகம் என்றால் என்ன ?
நம் மனதை ஒருமுகப்படுத்தி, மனத்தால் மந்திரங்களை உருவேற்றி, நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வது மாந்த்ரீகம் ஆகும். மந்திரம் = காத்தல் என்று பொருள், மந்திரம் என்பதே மருவி மாந்த்ரீகம் என்று வந்தது அதாவது ஒருவரின் துன்பத்தை நினைத்து, அறிந்து அவர்களை காப்பது என்று பொருள் .மாந்த்ரீகத்தின் வரலாறு :
ருக் - யஜ்ஜூர்- சாமம் - அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தை சார்ந்தது தான் இந்த மாந்த்ரீகம் ஆகும். இதற்க்கு மூலாதாரமானவர் ஜமதக்கினி முனிவர் குமாரர் பரசுராமர் இயற்றிய பரசு ராம சூத்திரம் என்ற நூல் தான் பெரும் ஆதாரமாக திகழ்கின்றது என்றால் மிகையாகது.மாந்த்ரீகத்தின் வகைகள் :
1 . உரு முறை ( WHITE MAGICK) : யந்திரம், மந்திரம், மூலிகை கொண்டு செயல்படுத்தும் முறையாகும்.2 . கரு முறை (BLACK MAGICK) : தலை பிள்ளை, நரபலி சம்பந்தப்பட்டது ( பின் விளைவுகள் அதிகம் ) ( நம் பாடத்தில் இல்லை ).
3 . தாந்த்ரீகம் (TANTRA) : மந்திர உரு இன்றி சூட்சுமத்தை மட்டும் வைத்து உருவேற்றும் முறையாகும்.
அஷ்ட கர்ம சித்திகள்
அஷ்ட கருமம் என்றால் ( அஷ்ட என்றால் எட்டு என்று பொருள், கருமங்கள் என்றால் செயல் என்று பொருள் ) அதாவது அஷ்ட கர்மம் என்பது எட்டு விதமான செயல்கள் என்று பொருள்.